About Me

Wednesday, February 1, 2012

கவிதையாய் வருவாய்

கவிதையாய் வருவாய் sekar tamil
கவிதையாய் வருவாய்
உணர்வில்லாத சொல்
உரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்
உண்மையில்லாத கூட்டில்
பிறப்பதெல்லாம் வீண்
ஆன்மாயில்லாத கவிதை
எழுத்துக்களின் சாக்கடை
உன்னை நினைத்து
வரிப்பதெல்லாம் சந்தனம்
உன்னை நினைத்து
என்னில் முளைத்து
கவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!