About Me

Friday, January 27, 2012

பாவம்

பாவம்
பாவம்
அழகான பிறைநிலா
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!