About Me

Wednesday, January 11, 2012

என்ன செய்யபோகிறாய்?

உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!