About Me
▼
Thursday, December 15, 2011
காதல் கசியும் நேரம்

அந்திசாயும் மாலைநேரம்
இரவே நுழைந்தாயோ
பகலே மறைந்தாயோ
என்னுள் ஏதோ மாற்றம்
சிறு மின்னலின் தோற்றம்
மனதே கரைந்தாயோ
ஈரம் கசிந்தாயோ
வானம் முழுக்க வண்ணமாற்றம்
எந்தன் வானில் அவளின் தோற்றம்
நிலவே வந்தாயோ
காதல் சொன்னாயோ
எந்தன் உணர்வு விளிம்புகளில் சிறுமாற்றம்
எந்தன் உடல் முழுதும் சிறுஏக்கம்
மனமே அழுதாயோ
அவளை நினைத்தாயோ
காதல் உணர்வுகளில் நான் திளைக்க
அவளைபற்றி என் உடல் நினைக்க
தூக்கம் வாராதோ
ஏக்கம் குறையாதோ
என் ஏக்கம் இங்கிருக்க
அவளின் ஏக்கம் அங்கிருக்க
கனவே வருவாயோ
தூரம் குறைப்பாயோ
இரவே முடியாதே!
பகலே வாராதே!
இரவே முடியாதே!
பகலே வாராதே!
உயிர் நண்பனே

எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா
இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்
என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா
வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா
சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா
விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?
அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!