About Me

Thursday, December 15, 2011

உனக்காக தான்

அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.

காதல் கசியும் நேரம்

அழகான மாலைநேரம்
அந்திசாயும் மாலைநேரம்
இரவே நுழைந்தாயோ
பகலே மறைந்தாயோ

என்னுள் ஏதோ மாற்றம்
சிறு மின்னலின் தோற்றம்
மனதே கரைந்தாயோ
ஈரம் கசிந்தாயோ

வானம் முழுக்க வண்ணமாற்றம்
எந்தன் வானில் அவளின் தோற்றம்
நிலவே வந்தாயோ
காதல் சொன்னாயோ

எந்தன் உணர்வு விளிம்புகளில் சிறுமாற்றம்
எந்தன் உடல் முழுதும் சிறுஏக்கம்
மனமே அழுதாயோ
அவளை நினைத்தாயோ

காதல் உணர்வுகளில் நான் திளைக்க
அவளைபற்றி என் உடல் நினைக்க
தூக்கம் வாராதோ
ஏக்கம் குறையாதோ

என் ஏக்கம் இங்கிருக்க
அவளின் ஏக்கம் அங்கிருக்க
கனவே வருவாயோ
தூரம் குறைப்பாயோ

இரவே முடியாதே!
பகலே வாராதே!
இரவே முடியாதே!
பகலே வாராதே!

உயிர் நண்பனே

எங்கோ பிறந்தோமடா
எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா

இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்

என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா

வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா

சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா

விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?

அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!