About Me

Saturday, November 12, 2011

நானா இப்படி?

என்னில் விழுந்தாய்
காதலாய் மாறினேன்

சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்

கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்

சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்

நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்

காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்

பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்

புவியில் விழுந்தாய்
 ஜீவன் ஆகினேன்

 துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்

உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்

என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..