About Me

Monday, October 24, 2011

பாட்டாளி


சுட்டு விரல் இங்கே
சுட்டு பொருள் எங்கே
பட்டபாடு எஞ்சிருக்க
புசித்த வயிறு காஞ்சிருக்க
பண்ணையவன் பழுத்திருக்க
பனம் பழமோ தனித்திருக்க
கூடியவளுக்கோ கூழில்லை
கேட்பதற்கு நாதியில்லை
கேட்காத நாளில்லை
கேட்டவனோ முடமாக
கேட்பவனோ செவிடாக
பிரார்த்தனையோ பிணமாக
வறுமையோ வறுத்தெடுக்க
பொறுமையை செல்லறிக்க
வாழவும் வழியில்லை
சாகவும் வழியில்லை
வழியில்லா வாழ்க்கையில்
வழிதெரியா வழிப்போக்கனாய்
சிதைந்து கொண்டிருக்கிறான்!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..