About Me

Monday, October 24, 2011

பாட்டாளி


சுட்டு விரல் இங்கே
சுட்டு பொருள் எங்கே
பட்டபாடு எஞ்சிருக்க
புசித்த வயிறு காஞ்சிருக்க
பண்ணையவன் பழுத்திருக்க
பனம் பழமோ தனித்திருக்க
கூடியவளுக்கோ கூழில்லை
கேட்பதற்கு நாதியில்லை
கேட்காத நாளில்லை
கேட்டவனோ முடமாக
கேட்பவனோ செவிடாக
பிரார்த்தனையோ பிணமாக
வறுமையோ வறுத்தெடுக்க
பொறுமையை செல்லறிக்க
வாழவும் வழியில்லை
சாகவும் வழியில்லை
வழியில்லா வாழ்க்கையில்
வழிதெரியா வழிப்போக்கனாய்
சிதைந்து கொண்டிருக்கிறான்!

Tuesday, October 18, 2011

ரோஜா

பச்சைக் குச்சியின்மேல்
கட்டழகியின் நடனம்,
காட்சி நேரம்,
காலை முதல்
மாலை வரை!

ஊடல்

குளிரின் மஞ்சத்தில்,
குளிர்காயும் நேரத்தில்,
இதமாய் பதமாய்,
இதழோடு இதழாக,
உயிரோடு உயிராக
ஒளிவீசினாய்!
காதல் சொன்னாய்,
கவிதை தந்தேன்,
கோபம் என்றாய்,
விலகி நின்றேன்,
வளைந்து நெழிந்தாய்,
வாரி அனைத்தேன்,
கண்ணில் சிரித்தாய்,
காதில் சொன்னேன்,
அன்பே கொல்லாதே!







அலைபேசி காதல்

சித்திரை பல்லழகி,
ஒய்யார நடையழகி,
சிலிர்க்கும் கூந்தலுடன்,
நீல வண்ண குழாயும்,
பச்சை வண்ண சொக்காயுடன்,
பூனநடை நடந்து கொண்டு,
சாய உதட்டின் வழியே
கண்ணே மணியே
கணியமுதே கற்கண்டே என்று
தாலாட்டிக் கொண்டிருந்தாள் அலைபேசியை!
காதலின் பரிசத்தை
ஊமையாய் குருடாய்
கேட்டுக்கொண்டிருந்தது அலைபேசி.

Wednesday, October 12, 2011

எதிர் உலகம்

நேசிக்கும் போது யோசிக்க முடியவில்லை,
யோசிக்கும் போது நேசிக்க முடியவில்லை,
நேசிப்பவர்களோ வாசலில்,
 யோசிப்பவனோ வீட்டிற்குள்,
அன்போ அனாதையாக ஊர்சுற்ற,
அகங்காரமோ எஜமானனாக,
யோசிப்புக்கும் நேசிப்புக்கும் இடையில்
வாழ்க்கை கரைந்து கொண்டிருக்கிறது.

அவள் வசம் நான்!!

அன்பே
உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் ,
உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது!
திருப்பி தருவாயா?
என் வசம் இருந்த நான் இப்போது உன்வசம்!
திருப்பி தருவாயா என்னை?
நீ சிரித்தது முதல் எனக்குள் போராட்டம்,
மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாய்?
நீ அடித்து விளையாட
என் இதயம் ஒன்றும் கோவில் மணியல்ல.
வலிக்கிறது இதயம்
அடிப்பது நீ என்பதால் இனிக்கிறது.
நீ வலியா இல்லை வாழ்க்கையா??

செறுக்கு

செறுக்குடன் சிரிக்கிறாள்
நிலா பெண்,
தன்னுடன் போட்டியிட்ட காதலிகள் எல்லாம்
கிழவிகள் ஆகுவதை கண்டு!

மயங்கொலிப் பிழை

அழகான மாலை நேரம்,
நீண்ட ஓடை,
அழகான மாலை நிலா,
அருமையான காற்று,
அழகான காதலன்,
காதலியோ தூங்கிக்கொண்டு இருக்கிறாள்,
வாழ்க்கையோ கரைந்து கொண்டு இருக்கிறது.

வெங்காய பாசம்

மனைவியின் அழுகையை நிறுத்த
ஆயிரம் சமாதானம் சொன்னான் கணவன்.
அவளோ விடாமல் அழுது கொண்டிருந்தால்.
கடைசியில் அவனும் அழ ஆரம்பித்தான், 
இதைப்பார்த்து அம்மா சொன்னாள்
வெங்காயம் நறுக்கியது போதுமென்று!