About Me

Tuesday, March 15, 2011

பீனிக்ஸ்

உலக வரை படத்தில் அது ஒரு தீவுக் கூட்டம்.எப்போதும் துன்பங்களையும் சவால்களையும் மட்டும் எதிர் நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் ஒர் நீரோடை.தான் செய்வது சரி என பட்டால் மலையுடனும் மோத தாயாராகியவர்கள்.இதற்காகவே இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசி சாம்பாலாக்கினர்.சற்றும் மனம் தளராமல் சாம்பலிலும் சரித்திரம் உருவாக்காலாம் என்று நிருபித்தவர்கள்.மண்வளம் இல்லை ஆனாலும் மண்ணை கடன் வாங்கி கப்பலில் விவசாயம் செய்தவர்கள்.தான் படும் கஷ்டத்தை மற்றவர்கள் பட கூடாது என சுனாமி எச்சரிக்கை மையம் அமைத்து பல நாடுகளை காப்பாற்றியவர்கள்.90 விழுக்காடு இறக்குமதியை மட்டும் வாழும் கனிவளம் இல்லாத ஓர் அப்பாவியான நாடு.தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தனி முத்திரை படைத்து "மனித வளம்" தான் எல்லாவற்றிலும் தலை சிறந்த வளம் என நிருபித்தவர்கள்.உலகின் அதிவேக ரயிலை கண்டுபிடித்தவர்கள் அதனால் தான் என்னவோ சாம்பாலாகி பத்தே வருடங்களில் உலக பொருளாதாரத்தின் உச்சத்தை அடைந்து உலக வல்லரசானது.எல்லோரும் வான்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் காலத்தில் வான்வெளிக்கு லிப்ட் வசதி யேசனை சொன்னவர்கள்.இன்றும் எந்தவித பூகம்பம் வந்தாலும் அதை தாங்கும் வசதியுடன் நவீன கட்டமைப்பு வசதி கொண்ட நாடு அது மட்டும் தான்.
இன்று நிலநடுக்கம்,சுனாமி,அணுவுலை வெடிப்பு என இவற்றின் இடையில் ஒரு சாதாரண வயதான பெண்மணி டீவி ஒன்றிற்கு தரும் பேட்டி"நாங்கள் வயதானவர்கள் சேர்ந்து நகரத்தை மறுசீரமைத்து வருகிறோம்".அது தான் "ஜப்பான்" "யாரையும் நம்பி நாங்கள் இல்லை எங்களை நாங்களே காத்து கொள்வோம்" என்று ஒவ்வொரு முறையும் வரலாற்றின் பக்கங்களை திருப்பி எழுதவைத்தவர்கள்.சாமுராய்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் "யாரும் இல்லை என்று நினைக்காதே!நீ இருக்கிறாய் மறந்துவிடாதே கடைசி துளி உள்ளவரை போராடு" உண்மையில் ஜப்பானில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒரு சாமுராய் தான்!."வெறும் சாம்பலில் இருந்து சாம்ராச்சியம் படைக்கலாம் இது தான் ஜப்பான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லும் பாடம்.ஜப்பான் தான் உண்மையான பீனிக்ஸ்.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..