About Me

Thursday, June 9, 2011

யாரடி நீ ?

யாரடி நீ
எங்கிருந்து வந்தாய்
ஏதேதோ பேசினாய்
என் இரவுகளை திருடிக்கொண்டாய்
கனவுகளை ஆக்கிரமித்தாய்
நேரங்களை உன் பிம்பமாக்கினாய்
எண்ணங்களில் கலந்துரையாடினாய்
கல்லாய் இருந்த என்னை
காதல் ரசம் பருக வைத்து
காதல் பித்தம் தெளியுமுன்னே
கானல் நீராய் பறந்து சென்றாய்
இறுதியில் என்னையும்
காதல்வரிகளை கிறுக்கவைத்து
காதலாய் வந்து
கவிதையாய் மறைந்து விட்டாய்.